அசுத்த காட்சிகளை கண்டதும் பதறிய கலெக்டர்! உடனடியாக சுத்தம் செய்து அதிரடி!

அசுத்த காட்சிகளை கண்டதும் பதறிய கலெக்டர்! உடனடியாக சுத்தம் செய்து அதிரடி!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் உள்ள திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் வாட்டர் டேங்க் மற்றும் அதன் அருகில்  மிகவும் மோசமான நிலையில் அசுத்தம் காணப்பட்டது.,

 இதனை வீடியோ எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய பத்தே நிமிடத்தில் இதற்கு தீர்வு காணப்பட்டது.பதுபற்றின விவரம் வருமாறு,

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 1939 ஆம் ஆண்டு சட்டத்தை கையில் எடுத்து கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கி உள்ளார், அதை வரவேற்கின்றேன்.

 ஆனால் அதை விட கொடிய நோய் பரப்பும் நிலையை திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தி வருகிறது.

 இதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்று, அதன் மூலம் சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற ஆவலில் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

 மேற்படி வாசகங்கள் அடங்கிய ஒரு வாட்சாப் மெஸேஜ் "லைவ்லுக்"கின் முதன்மை செய்தியாளருக்கு கிடைக்கப் பெற்றது.

 அந்த காட்சிகளை பார்த்த செய்தியாளர், அதை அப்படியே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் செல் எண்ணுக்கு அனுப்பி வைத்தார்.

 உடனடியாக அதைப் பார்த்த ஆட்சியர் மருத்துவர் கே.செந்தில்ராஜ் இ.கா.ப. அவர்கள் பத்தே நிமிடங்களில் திருச்செந்தூர் பேருந்து நிலையத்துக்கு நகராட்சி ஊழியர்களை அனுப்பிவைத்தார்.

 பின்னர் சாக்கடை அள்ளும் லாரி முதற்கொண்டு அரசு இயந்திரம் அங்கு முகாமிட்டு, நாற்றம் பிடித்த பேருந்து நிலைய வளாகத்தை சீர்ப்படுத்தினர். அதில் வாட்டர் டேங் முதற்கொண்டு, கால்வாய் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்தனர். சுதந்திரமாக மேய்ந்துக் கொண்டிருந்த பன்றிகளை பிடித்தனர்.

  மேற்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கே.செந்தில்ராஜ் அவர்கள் பொதுமக்களின் வேண்டுதலின்படி பத்தே நிமிடத்தில் அதிரடியாக தீர்வு ஏற்படுத்தியதை பொதுமக்கள் வெகுவாக பாரட்டினர்.