மாணவர்களுக்கு ஹேர்கட் செய்த தலைமையாசிரியர்!

அ.அரவிந்தன்,
போக்கிலி போன்ற முடி வைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் வந்த மாணக்களுக்கு அந்த பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியர் ஹேர்கட் செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் வள்ளார் மேல் நிலைப்பள்ளி உள்ளது. 126 மாணாக்கள் பயிலும் இந்த பள்ளிக்கு சேவியர் சந்திரக்குமார் என்பவர் தலைமையாசிரியராக உள்ளார்.
மேற்படி பள்ளிக்கு பல மாணவர்கள் தலையை ஒழுங்காக சீவுவதில்லை, எண்ணெய் தேய்பதில்லை என்பதை கவனித்த தலைமையாசிரியர் நேற்று காலை பள்ளிக்கூடம் திறந்த உடன் கத்தரிக்கோல் மற்றும் தேங்காய் எண்ணெய் சகிதமாக கேட்டருகே நின்றுக்கொண்டு முடிதிருத்தும் பணியை மேற்கொண்டார்.
இதற்காக அவர் உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகளிடமும், பெற்றோர்களிடமும் முன் அனுமதி பெற்றதால் இதற்கு அங்கு பிரச்சனை ஏதும் எழவில்லை.
பிரபல யூடியூபர் திரு.ஆ.ரிஷி அவர்களுக்கு இன்று 24.06.2022 பிறந்த நாள். அவருக்கு எங்கள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்