எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் வேளாண் பயிற்சி! ஆயிரகணக்கானோர் பங்கேற்பு!

பா.சுரேஷ்,
அச்சரபாக்கம் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உழவர் பெரு விழாவில் 1750 விவசாயிகள் பங்கேற்ற நிலையில், கண்காட்சி மற்றும் முன்னோடி விவாயிகளுக்கு எஸ்.ஆர்.எம் துணைவேந்தர் முனைவர் முத்தமிழ்ச்செல்வன் பரிசு வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரபாக்கம் அடுத்த பாபுராயன்பேட்டை வேந்தர் நகரில் எஸ்.ஆ£. எம் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக இயங்கி வரும் எஸ்.ஆ£. எம் வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில் அக் கல்வி குழுமத்தின் நிறுவனர் வேந்தரின் 84 வது பிறந்த நாளை முன்னிட்டு உழவர் பெருவிழா நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், வேளாண் கருவி உற்பத்தியாளர்கள்,வேளாண் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர், ஊராட்சி மன்ற நிர்வாகிகள் என சுமார் 2000 பேர் பங்கேற்றனர். சுமார் 1750 விவசாயிகள் பங்கேற்றனர்.
உழவர் பெருவிழாவை யொட்டி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கண்காட்சியினை எஸ்.ஆ£.¢எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் முனைவர் சி. முத்தமிழ்செல்வர் திறந்து வைத்தார். இதில் வேளாண் இடுபொருட்கள் உற்பத்தியாளர்கள், வங்கி நிர்வாகத்தினர், இன்சூரன்ஸ் நிறுவனத்தினரின் 10 அரங்குகளும், வேளாண் கல்லூரி மாணவர்களின் தேனி வளர்ப்பு, காய்கறி வளர்ப்பு, பசுமை குடில், காளான் வளர்ப்பு உள்ளிட்ட 14 அரங்குகள் இடம்பெற்றன.
உழவர் பெருவிழா தொடக்க விழாவிற்கு வருகை தந்தவர்களை எஸ்.ஆர். எம் வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் மு. ஜவஹர்லால் வரவேற்று பேசுகையில், இந்த கல்லூரியில் பி.எஸ்சி (ஹனர்ஸ்)வேளாண்மை, பி.எஸ்சி (ஹனர்ஸ்)தோட்டக்கலை என்ற இரண்டு இளங்கலை பட்ட வகுப்புகளும், உழவியல், பழங்கள் அறிவியல், மரபியல் மற்றும் நடவு ஆகிய 4 முதுகலை பட்ட வகுப்புகளும் உள்ளன. இங்கு குறைந்த நில பரப்பில் அதிக உற்பத்தி, மண் வளம், நீர் மேலாண்மை, பயிர் சாகுபடி பணியில் இடுபொருட்கள் பயன் படுத்துதல் பற்றியும், விவசாயிகளுக்கு நிலையான வருவாய் பற்றியும் வேளாண் பெருமக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்.ஆ£.¢எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் முனைவர் சி.முத்தமிழ்செல்வர் பங்கேற்று கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த மாணவர்களின் அரங்குகளுக்கும், வேளாண் உற்பத்தி நிறுவனங்களின் அரங்குகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ், கரும்பு உற்பத்தியில் அகிலா இந்திய அளவில் ஏக்கர் ஒன்றுக்கு 119 டன் உற்பத்தி செய்த முன்னோடி விவசாயி சிறுவாங்குர் கிராமத்தை சேரந்த எஸ்.பாண்டியனை பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.
வேளாண் உற்பத்திக்கு உரிய விலை இல்லாததும் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுகிறது, எனவே வேளாண் உற்பத்திக்கு நிலையான விலை தேவை. வேளாண் உற்பத்தி பணியில் நீர் மேலாண்மை, பயிர் காப்பிடு உள்ளிட்டவை அவசியம் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் சு.பொன்னுசாமி, உதவி பேராசிரியர் முனைவர் இரா. ராஜசேகரன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.