போதை பொருட்கள் குறித்து மாணவர்களுடன் எஸ்.பி. நடை!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாவட்டம், வேலூரில், தமிழ்நாடு காவல்துறை வேலூர் மாவட்டத்தின் சார்பில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இதை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், இ.கா.ப. அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் இதில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
போதை பொருள் மனித குலத்திற்கு தீமையை ஏற்படுத்தும் குறிப்பாக இளைஞர்கள் போதைக்கு எதிராக செயல்பட வேண்டுமெனவும் இதனால் உடல் நலமும் மன நலமும் பாதிக்கபடுவதால் மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும் போதையில்லா சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றது.
இதில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேபி உள்ளிட்ட பல போலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.