டிரிபில்ஸ் போகக்கூடாது!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் ராஜபாளையம் நகர மற்றும் தேசிய போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். ராஜபாளையம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் லாவண்யா சிறப்புரை ஆற்றினார். கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், மூன்று பேர் அமர்ந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது, தலைக்கவசம் உயிர்க்கவசம் எனவே தலைக்கவசத்தை அணிந்து கொண்டுதான் இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும்.
மிதமான வேகத்தில் வண்டியை இயக்க வேண்டும். பெரும்பாலான விபத்துகளில் உங்களைப் போன்ற இளைஞர்கள் அதிகம் பாதிக்கின்றனர். எனவே விழிப்போடு செயல்பட்டு விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகத்தை வெளியிட்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராமராஜ், ராமலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.