கிரீன் சர்கிளை நேர் சாலையாக மாற்றி போக்குவரத்து பிரச்சணைக்கு தீர்வுகாணப்படும்! மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மாநகராட்சி பொலிவு நகரமாக மாற்றூம் வகையில் போஸ்டர்களை அனுமதிப்பதில்லை, கிரீன் சர்கிளை மாற்றி நேர்வடிவிலான சாலையாக மாற்றி போக்குவரத்து பிரச்சணைக்கு தீர்வுகாணப்படும் என மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் பேட்டியில் சொன்னார்.
வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள கிரீன் சர்கிள் பகுதி போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடமாக மாறிவிட்டது.
அந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பொலிவுறு நகரம் என்று எடுத்துக்காட்டும் வகையில் கிரீன் சர்கிள் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டு ஓவியங்களும் திட்டவுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தேசியநெடுஞ்சாலை கிரீன் சர்கிள் மேம்பாலத்தில் மாநகராட்சி சார்பில் வண்ண ஓவியங்கள் வரைய உள்ளோம். கல்வித்துறை சார்பில் ஒழுக்கங்களை கடைபிடிப்பது குறித்து கூறவுள்ளோம் அனைத்தும் படவடிவில் செய்ய உள்ளோம். இது மாநகராட்சியின் பொலிவை உயர்த்தி காண்பிக்கும்.
கிரீன் சர்கிள் போக்குவரத்தை குறைக்க கூறியுள்ளோம், கிரீன் சர்கிள் என்பதை மாற்றி நேராக அமைக்கவுள்ளோம் இதன் மூலம் போக்குவரத்து குறையும் வண்ணம் பணிகளை துவங்கியுள்ளோம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் காகிதப்பட்டறை அருகில் மேம்பாலத்திலும் ஓவியங்களை தீட்டி வருகிறோம் அடுத்ததாக தொரப்பாடி மேல்நிலைப்பள்ளி அருகிலும் ஓவியங்களை வரையவுள்ளோம்.
அரசு சுவர்களில் ஓட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றி அரசு திட்டங்களை செயல்படுத்தி புதிய பொலிவுறு நகரமாக மாற்றுகிறோம் வேலூரில் நம்ம வேலூரில் என்ற அடிப்படையில் கிரீன் சர்கிள் பகுதிகள் முக்கிய இடங்களை படங்களாக வைக்கவுள்ளோம்.
இன்னும் 4 நாட்களில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கபடும் அதன் பின்னர் கடைகளும் ஏலம் விடப்படும் என்று கூறினார்.