நுகர்வோர் தின உறுதி மொழி ஏற்ற ஆட்சியர் மற்றும் அலுவலர்கள்!

 நுகர்வோர் தின உறுதி மொழி ஏற்ற ஆட்சியர் மற்றும் அலுவலர்கள்!

  கு.அசோக்,

 வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.  

 வேலூர்  மாவட்டம், வேலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு, மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.  அப்போது, நுகர்வோராகிய நாம் நுகர்வியல் கல்வியை அறிவதோ£டு, நுகர்வோர்க்குறிய உரிமைகளை நிலை நிறுத்தப் பாடுபடுவோம்.

 நாம் தரமான பாதுகாப்பான பொருட்களையே வாங்குவோம், நாம் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பட்டி  பெறுவோம். தேவைக்கேற்ற நுகர்வினை மேற்கொள்வோம், நாம் அனைவரும் பொறுப்புள்ள மற்றும் கடமையுள்ள நுகர்வோர்களாக இருக்க ஒன்று பாடுபடுவோம்.

 நுகர்வோர் பாதுகாப்புடன் ஆரோக்கியமான சமுதாயம் படைக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-னை பின்பற்றி நுகர்வோராகியா நாம் நமக்கான பாதிப்பினை உறுதி செய்வோம்.

 அடிப்படை உரிமைகளைப் பற்றி அறிவோம், நுகர்வோர் கல்வியை பரப்பவும், எல்லா நிலையிலும் விழிப்புடன் செயல்படுவோம் விழிப்புணர்வு மிக்க நுகர்வோரே அதிகாரம் நுகர்வோர் என்பதை அறிவோம் என்று உறுதி மொழி ஏற்றனர்.