மதுபாட்டில் வடிவில் குளிர்பானங்கள்!

மதுபாட்டில் வடிவில் குளிர்பானங்கள்!

  சபரி.ஈஸ்வரன்,

 மதுபாட்டில் வடிவில் குளிர்பானங்கள் விற்கப்படுவதால்  மாணவர்கள் குஷியாகியிருக்கிறார்கள்.

 இதனை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

 இதுபற்றின விவரம் வருமாறு,

 விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுகாதார அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் சுகாதார பிரிவினர் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.

  இந்த நிலையில் சிவகாசியில் உள்ள ஒரு கல்லூரியின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அந்த கடையில் இருந்த குளிர்பானங்களை ஆய்வு செய்தார்.

 அப்போது அங்கு மதுபாட்டில்கள் வடிவில் குளிர்பானங்கள் இருப்பது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

  பின்னர் அந்த பாட்டிலில் உள்ள தகவல்களை சரி பார்த்தபோது அது மதுபாட்டில் இல்லை என்று தெரியவந்தது.

  இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில் சில குளிர்பான நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை மதுபாட்டில் போன்று வடிவமைத்து விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதை பலர் ஆர்வமுடன் வாங்கி பருகிவருகிறார்கள். இதில் மதுவகையில் உள்ள ஆல்கஹால் இல்லை.