ரொம்ப முக்கிய நிகழ்ச்சி!

க.பாலகுரு,
30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் திருவாரூரில் நடைபெற்றது. திருவாரூர் கோட்டத்திற்குட்பட்ட வழிகாட்டி ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்பு.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக 30 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் "ஆரோக்கியம் மற்றும் நல வாழ்விற்கான சுற்றுச்சூழல் அறிவியலை புரிந்து கொள்ளுதல் என்ற தலைப்பின் கீழ் கட்டுரைகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக வழிகாட்டி ஆசிரியர்களுக்காண பயிற்சி வகுப்புகள் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தனியார் பள்ளியில் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் திருவாரூர் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பணிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் ஸ்டீபன் நாதன், மாவட்ட செயலாளர் சுந்தரலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.