கீழே கிடந்த பணக்கட்டை உரியவரிடம் ஒப்படைத்த ஏழை மாணவன்! பள்ளிக்கூடத்தில் பாராட்டு!

கு.அசோக்,
வாலாஜாபேட்டை அருகே பஜார் வீதியில் சாலையில் கீழே கிடந்த ரூபாய் 10 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த அரசு பள்ளி மாணவன் நேர்மைக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கெங்கைகொண்டான் மண்டப தெருவை சேர்ந்தவர் சாந்தி, கதிரவன் தம்பதியர்களின் இளைய மகன் சக்திவேல் வயது (11). இவர்¢ அதே பகுதியில் உள்ள மங்களாம்பாள் நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறா£.¢ இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாலாஜா பஜார் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் கீழே மணி பர்ஸ் கிடைத்துள்ளது.
அதனை எடுத்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஒரு அலுவலகம் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கொடுத்துள்ளார். மணிபர்ஸை வாங்கி திறந்து பார்த்த போது அதில் ரூபாய் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரொக்கம் கட்டு கட்டாக இருப்பது தெரியவந்தது.
மேலும் அதில் ஒரு துண்டு சீட்டில் உரியவரின் செல்போன் எண் இருந்தது. அந்த எண் மூலம் அழைத்து தகவல் தெரிவித்த பின் அவரிடம் அதை ஒப்படைத்தார்.
இதற்கிடையே பள்ளிக்கூடத்தில் நேற்று காலை இறைவணக்க தமிழ் தாய் வாழ்த்து மரியாதை செலுத்திய பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேஸ்வரி தலைமையில் கூடியிருந்த ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என முன்னிலையில் மாணவர் சக்திவேலை பாராட்டி சால்வை அணிவித்தும் புத்தகத்தை வழங்கியும் கவுரவித்தனர்.
பின்னர் சக மாணவர்கள் அவரை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.