70 வயதான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! வெங்கடேஸ்வரா பள்ளியில் மகிழ்ச்சி!

70 வயதான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு! வெங்கடேஸ்வரா பள்ளியில் மகிழ்ச்சி!

  ஜி.கே.சேகரன்,

1971 ஆம் ஆண்டு வெங்கடேஸ்வரா பள்ளியில் படித்த மாணவர்கள் இன்று குடும்பத்தினருடன் வந்து ஒருவரை ஒருவர் சந்தித்து கலந்துரையாடினர்.

 வேலூர் மாவட்டம், வேலூரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இந்த பள்ளியில் 1971 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்து வருகின்றனர்.

  குடும்பத்தினருடன் வந்து பங்கேற்கும் அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதுடன், தற்போது அங்கு பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார்கள்.

  அந்த வகையில் தற்போது 35 பழைய மாணவர்கள் மட்டுமே உள்ளனr. இன்று அவர்கள் பேரன், பேத்திகள் மற்றும் குடும்பத்தினருடன் சந்தித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிகொண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒரு திருக்கடையூர் பக்தி ஸ்தலத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்யவும் கிளம்பி சென்றனர். இவர்களுக்கு 70 வயது பூர்த்தியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.