உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி!

D.Nelson,
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் ஊராட்சியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம், இறைவன்காடு ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.48 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் 4 குப்பை சேகரிக்கும் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கீ.வ.குப்பம் ஒன்றிய குழு தலைவர் திரு.ரவிச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் திரு.நீ.செந்தில்குமாரன், இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.எம்.ஸ்டீபன் ஜெயகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை ) திரு.ஏ.வெங்கடேஷ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.ஜெ.நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.