கல்வி கடனை செலுத்த ஆட்சியர் அட்வைஸ்!

ஜி.கே.சேகரன்,
மாணவர்கள் கடனை பெற்று கல்வியை நல்ல முறையில் பயில வேண்டும், கல்வி கடனையும் திரும்ப செலுத்த வேண்டும், வங்கிகளும் மாணவர்களுக்கு அதிக அளவில் கல்வி கடன் களை அளிக்க வேண்டும் அரியூரில் மாணவர்களுக்கு கல்வி கடனை வழங்கி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
வேலூ£ ¢மாவட்டம், அரியூர் நாராயணி செவிலியர் கல்லூரியில் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கல்வி கடன் மேளா நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இவ்விழாவில் மாணவ, மாணவிகள் உயர் கல்வியை பெற கடனுதவியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கி விழாவில் பேசினார்.
அப்போது அவர், கல்வியை அனைவரும் நல்ல முறையில் கற்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது அதிலும் அனைவரும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் அதிலும் கொரோனா காலத்திலும் மாணவர்களின் கல்வி தடைபட கூடாது என்பதில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.
மாணவர்கள் நீங்கள் கடனை பெற்று நல்ல முறையில் கல்வியை கற்ற பின் அதன் பின் கடனை செலுத்த வேண்டும் வங்கிகளும் மாணவர்களுக்கு அதிக அளவில் கல்வி கடனை அளிக்க வேண்டுமென பேசினார்.