148.27 கோடி மதிப்பில் மருத்துவக் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது! வேலூர் ஆட்சியர் தகவல்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 77282 பேருக்கு ரூபாய். 148.27 கோடி மதிப்பில் மருத்துவக் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.பா. அவர்கள் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி மற்றும் 15 நபர்களுக்கு காப்பீட்டு அடையாள அட்டைகள் வழங்கியும் மேலும் சிறப்பாக பணியாற்றிய பணியாளருக்கு பாரட்டு சான்றினை வழங்கினர்.
மேலும் வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கிழ் 4 அரசு மருத்துவமனைகள் 18 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 2 நோய் கண்டறியும் பாரிசோதனை மையங்கள் செயல்படுகிறது.
இதுவரை காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டை எடுக்காத பயனாளிகள் ஆண்டு வருமானம் ரூபாய்.72000-க்கு கீழ் உள்ளவர்கள் காப்பீட்டு விண்ணப்ப படிவத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு தொடர்பாக பதிவு செய்யும் அறையில் புகைப்படம் எடுத்து பயனடையலாம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்.இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு:-செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.