மின் கோபுர விளக்கு ப்ளீஸ்!

மின் கோபுர விளக்கு ப்ளீஸ்!

  கு.அசோக்,

   சோளிங்கர் பேருந்து நிலையத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் உயர் மின் கோபுர விளக்குகளை சீரமைக்கவும் திருட்டுகளை தடுக்க வேண்டுமென மக்கள் கோருகின்றனர்

  இராணிப்பேட்டை மாவட்டம்.சோளிங்கர் பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் திருட்டு வழிப்பறி குற்றச் சம்பவங்கள் இப்ப தவிக்கும் வகையில் உயர்மின் கோபரவிளக்கு அமைக்கப்பட்டது.

  ஆனால் கடந்த சில மாதங்களாகவே ஆறு மின் விளக்குகளில் ஒரு மின்விளக்கு மட்டுமே எரிவதால் இதனால் போதிய வெளிச்சம் இல்லாமல் பேருந்து நிலையம் இருளில் மூழ்கியுள்ளது.

   இதனால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து மற்றும் இருசக்கர வாகன திருட்டுப்போதுவது வழக்கமாக உள்ளது.இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது உயர் மின்விளக்கு சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்