நல திட்ட உதவிகளை முனைப்போடு செயல்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம்! வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி பேச்சு!

நல திட்ட உதவிகளை முனைப்போடு செயல்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம்! வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி பேச்சு!

 ஜி.கே.சேகரன்,

வேலூரில் மக்களுடன் முதல்வர் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் வேலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில்  பெறப்பட்ட மனுக்களில் 632 பயனாளிகளுக்கு  ரூ.29.79 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்  தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி வழங்கினார்.

          வேலூர்மாவட்டம், வேலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டு, மனுக்களுக்குரிய  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட ஆட்சித்தலைவர்   சுப்புலெட்சுமி  தலைமையில் இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

   முதல்வரின் முகவரி துறை சார்பில் மக்களுடன் முதல்வர் எனும் புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 18.12.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் 18.12.2023 முதல்  05.01.2024 வரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி அருகில் அமைந்துள்ள 18 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்றது.

   இம்முகாம்களில் அரசின் சார்பில் எரிசக்தித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைசிறுபான்மையினர் நலத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆகிய  14 துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 8162 மனுக்கள் பெறப்பட்டன.

 இம்முகாம்களில் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய விசாரனை மேற்கொள்ளப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.

   இதுவரை பெறப்பட்ட மனுக்களில் 6278 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 1765 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 119 மனுக்கள் மீது மேல் நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. வேலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்  மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்பட்டுள்ள மனுக்களுக்குரிய  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்  வருவாய்  துறையின் சார்பில் ரூ.7,38,000/- இலட்சம் மதிப்பில் 148 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ரூ.2,40,564/- இலட்சம் மதிப்பில் 36 பயனாளிகளுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில்  304 பயனாளிகளுக்கும், எரிசக்தி துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.6,86,660/-  இலட்சம் மதிப்பில் 27 பயனாளிகளுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறையின் சார்பில் ரூ.88,604/- ஆயிரம் மதிப்பில் 13 பயனாளிகளுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ.12.25 இலட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கும் என மொத்தம் 632 பயனாளிகளுக்கு ரூ.29,78,828/- இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

   இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி பேசுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது மக்களுக்கு அவர்களின் இருக்கும் இடத்திற்கே சென்று பல்வேறு சேவைகளை வழங்கும் வகையில் 14 துறைகளை ஒருங்கிணைத்து மக்களுடன் முதல்வர் எனும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். 

   நம்முடைய வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 14 துறைகளை சார்ந்த குறிப்பிட்ட சேவைகளுக்கான 8,000 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இவற்றில் 6000 க்கும் மேற்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

  இந்த மனுக்களுக்குரிய பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

  மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கியுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு மின் இணைப்பு, தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள்மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு உபகரணங்கள்பிற துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

  மக்களுக்கு தேவையான திட்டங்களையும்,  நல திட்ட உதவிகளையும் முனைப்போடு செயல்படுத்துவதே இந்த அரசு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

  பொது மக்களிடம் இருந்து பெறப்படும் ஒவ்வொரு மனுக்களும் குறைகளை தீர்க்கும் வகையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு மிகுந்த அக்கறையுடன் தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர்  மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாநகராட்சி ஆணையாளர்  ஜானகி ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.