திடீரன திருப்பத்தூர் வந்த கமாண்டோ படையினர்! நக்சல் நடமாட்டம் குறித்து ஆய்வு!

திடீரன திருப்பத்தூர் வந்த கமாண்டோ படையினர்! நக்சல் நடமாட்டம் குறித்து ஆய்வு!

ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டமான இடங்கள் உள்ளதா என திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில்  அதிவிரைவு படை கமாண்டோ ஆய்வு நடத்தினர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பதட்டமான அல்லது பயங்கரவாதிகள் நடமாட்டம், நச்சலைட்டுகள் ஒடுக்குதல்  மத மோதல் ஆகியவைகளை தடுக்கும் வகையில்  கிராமிய காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலாவிடம்  ஆலோசனை நடத்தப்பட்டது.

   மத்திய அதிவிரைவு படை கமாண்டர் சஜ்ஜூவ் தலைமையில், 35 கமாண்டோ வீரர்கள் முன்னிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

   மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 70 கமாண்டோ படையினர் வந்துள்ளதாகவும், அவர்கள் பத்து நாட்கள் தங்கி இருந்து கண்காணிக்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.