அண்ணாமலை நாங்க ரொம்ப நேரமா காத்திருக்கிறோம் சீக்கிரம் வாங்க! மைக்கில் சவுண்டுவிட்ட பாஜக தொண்டர்!  "ஓ" போட்ட ராணிப்பேட்டை காவல் துறை!

அண்ணாமலை நாங்க ரொம்ப நேரமா காத்திருக்கிறோம் சீக்கிரம் வாங்க! மைக்கில் சவுண்டுவிட்ட பாஜக தொண்டர்!  "ஓ" போட்ட ராணிப்பேட்டை காவல் துறை!

 கு.அசோக்,

  அண்ணாமலை நாங்க ரொம்ப நேரமா காத்திருக்கிறோம் சீக்கிரம் வாங்க என்று மைக்கில் பாஜக தொண்டர் சவுண்டு விட்டுக்கொண்டிருக்க, ராணிப்பேட்டை காவல் துறையினர் அண்ணாமலைக்கு ஓடி ஓடி பாதுகாப்பு கொடுத்தனர். அவரது நடைபயணம் சட்டமன்ற உறுப்பினர் காந்தியின் வீட்டுக்கு அருகேயிருந்து துவங்கப்படும் என்று அறிவித்து அந்த பக்கம் டிராபிக்கை மூடிவிட்டனர்.

  ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தொகுதி முத்துக்கடையில் பாரதிய ஜனதா கட்சியின் என் மண் என் மக்கள் பயணத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அவருக்கு பாஜக தொண்டர்கள் மக்களும் உற்சாக வரவேற்பளித்தனர் இதில் பாஜக மாவட்டத்தலைவர் விஜயன் பாஜக மண்டல பொறுப்பாளர் கார்த்தியாயினி உள்ளிட்ட திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர்.

   அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் இந்தியாவில் முதல் நகராட்சி வாலாஜா தான் ஆனால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது சரியாக சாலைகளை கூட பராமரிக்கப்படவில்லை. சாலை குழியிருக்கிறதா? குழியில் சாலையுள்ளதா என்று தெரியவில்லை.

  1973 ஆம் ஆண்டு திமுக ஆட்சிகாலத்தில் முதல் ஊழலை ராணிப்பேட்டையில் தான் செய்தது. ராணிப்பேட்டையில் கருணாநிதி¢ குரோமியம் தொழிற்சாலையை துவங்கி வைத்தார்.  ஆனால் குரோமியம் தொழிற்சாலை மூடப்பட்டு பல ஆண்டுகளாகியும் குரோமியம் கழிவுகள் அகற்றப்படவில்லை இம்மாவட்டத்தில் உள்ள தேங்காயில் கூட குரோமியம் கழிவு இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது.

  இதனால் மக்கள் இந்த மாவட்டத்தில் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கருதப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு பசுமைதீர்ப்பாயம், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரோமியம் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டது.   

 இங்குள்ள நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினரோ சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதனோ அதனை அகற்ற அக்கறை காட்டவில்லை, அரசுக்கும் அக்கறை இல்லை இதனால் மக்கள் பாதிக்கபடுகின்றனர். ¢ இம்மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் ரட்சகன் இந்தியாவிலேயே பணக்கார எம்பியாக உள்ளார். சட்டமன்ற உறுப்பினர் காந்தி, பெயருக்கும் அவருக்கும் சம்மந்தமே இல்லை.

 மேலும் காந்திக்கு நாம் என்ன பேசுகிறோம் எதைப்பற்றி பேசுகிறோம் என கூட தெரியாது. அதே போல் தான் ராகுல்காந்தியும்.

 தமிழகத்தில் ஊழல்கள் அதிகமாக காரணம் இரண்டு திராவிட கட்சிகள் தான். இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி நடத்தி தமிழக மக்களை பரம்பரை பரம்பரையாக ஏழையாக மாற்றிவிட்டனர் மீண்டும் பிரதமர் மோடிக்கும் தமிழகத்தில் பாஜகவுக்கும் வாய்ப்பளியுங்கள் என பேசினார்.

  குறிப்பு:- அண்ணாமலை நடைபயணத்தை காலையில் துவக்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியைச் சார்ந்தவர்களும், வரவழைக்கப்பட்ட கூட்டத்தினரும் பிற்பகல் 12.30 மணிவரை காத்திருந்தனர். இந்த லட்சணத்தில் வெயில் வாட்டியது.

  கொடுக்கப்பட்ட பதாகைகளை வெயிலுக்கு பாதுகாப்பாக பயன்படுத்திய பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தனர். அங்கிருந்த மைக்செட்டில் ஒருவர் அண்ணாமலை அறிவது நாங்கள் இங்கு உங்களுக்காக வெகுநேரம் காத்துக் கொண்டிருக்கிறோம் சீக்கிரம் வாங்க என்று அனோன்ஸ்மென்ட் செய்துக்கொகொண்டிருந்தார்.

  அதே நேரத்தில் ராணிப்பேட்டை காவல் துறையினர் அண்ணாமலையை ஜரூராக வரவேற்றனர். சம்மந்தமே இல்லாமல் பொதுமக்களை வாட்டி வதைத்து, செயற்கையாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். கண்டெய்னர்கள் நகரத்துக்குள் நுழைந்தததால் பிரச்சனை ஏற்பட்டது. ராணிப்பேட்டையில் உள்ள பல சந்திப்புகளில் சாலை பயணிகளை போலிசார் வெறுப்பேற்றினார்கள்.