.  கொரோனா போல உருமாறும் சமஸ்கிருதம்!கி.வீரமணி பேச்சு!!

.  கொரோனா போல உருமாறும் சமஸ்கிருதம்!கி.வீரமணி பேச்சு!!

 கு.அசோகன்,

கொரோனா உருமாறி வருவதைப் போல் சமஸ்கிருதம் உருமாறி நீட் தேர்வாக வந்திருக்கிறது. திருப்பத்தூரில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேச்சு.

 திருப்பத்தூர் மாவட்டம் ,திருப்பத்தூர் அடுத்த இஸ்மாயில் பேட்டை  சிவராஜ் லாட்ஜ் அருகில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து பரப்புரை பயணம் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

   இதனைத்தொடர்ந்து திருப்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் கி வீரமணி பேசுகையில்..கொரோனா என்கிற நோயை விட கொடியது நீட் தேர்வு. கொரானா நோய் வந்தாலும் தடுப்பூசி போட்டு தப்பித்துக்கொள்ளலாம். நானே இரண்டு முறை பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறேன்.

 நூறு வருடங்களுக்கு முன்பு நம்முடைய பிள்ளைகள் எல்லாம் மருத்துவர்களாக முடிந்ததா? அப்பொழுதெல்லாம் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவராக முடியும்.

 மருத்துவத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது திரும்புகிற திசையெல்லாம் நம்முடைய பிள்ளைகள் மருத்துவர்களாக இருக்கின்றனர்.

 பெரியாரும் நீதிக்கட்சியும் தான் அதற்கு காரணம். கொரோனா எப்படி உருமாறி நம்மை தாக்குகிறதோ அதேபோல் சமஸ்கிருதம் நீட் தேர்வாக இப்பொழுது உருமாறி நம்மை தாக்குகிறது என்றும். தேசிய கல்வி கொள்கை வந்துவிட்டால் பழைய குல வழிக் கல்வியை வலியுறுத்துவதாக அமைந்துவிடும்.

 3ம் வகுப்பு படிக்கும் குழந்தை முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் வரை அனைவருக்கும் பொதுத்தேர்வு என்றால் அவர்களால் எப்படி படிக்க முடியும்.

 கல்வியை பாதியில் நிறுத்திவிட்டால் பெற்றோர் தொழிலை செய்வதற்கு தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது.

  இதுபோன்ற பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர் குரலுக்கு  செவிசாய்த்து ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் பச்சை தமிழர் காமராஜர் என்று கூறி பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட திக பொறுப்பாளர்  எழில் விசிக மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் திமுக வை சார்ந்த நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் உப்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது.