ஜெயலலிதாவுக்கு கண்ணீரோடு அஞ்சலி செலுத்திய கட்சியினர்- பொதுமக்கள்!

ஜெயலலிதாவுக்கு கண்ணீரோடு அஞ்சலி செலுத்திய கட்சியினர்- பொதுமக்கள்!

ம.பா.கெஜராஜ்,

முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது

  நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

 இந்நிலையில் "குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலர செய்வோம். எதிரிகள் ஒருபக்கம் என்றால் துரோகிகள் மறுபக்கம், சதிவலைகளை அறுத்தெறிவோம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.

 நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அதிமுக தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி நெரிசலில் சிக்கினார்.

 அஞ்சலி செலுத்தும் போது பொதுமக்கள் பலரும் ஜெயலலிதா நினைவிடத்தில் கூடினர்.

 வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் ஜெயலலிதா சமாதியில் கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினார்கள்.

 இதில், பா.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கோகுல இந்திரா, நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செம்மலை, தளவாய்சுந்தரம், சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், வெங்கடேஷ்பாபு, இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலா ளர்கள் இ.சி.சேகர், மலர்மன்னன் உள்பட பலர் எடப்பாடி உள்ளிட்ட பலர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.