எச்சில் துப்பியதால் மோதல்:- மண்டை உடைப்பு - கலாட்டா!

டி.முகமது இர்பாஃன்,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் மோனிஷ் இவர் அம்பூர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவில் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது அவ்வழியே சென்ற பாலா என்பவர் மோனிஷ் மீது எச்சில் துப்பினாராம்.
இதை தட்டி கேட்ட மோனிஷ் மீது இருவரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் அங்குள்ளவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் பாலா மற்றும் சிவா ஆகிய இருவரும் சேர்ந்து மோனிஷ் வீட்டிற்கு சென்று அங்கு அவர் இல்லாததால் அவருடைய தந்தை பழனிவேல் மண்டையில் சுத்தியால் அடித்துள்ளார்.
அதையறிந்து அங்கு சென்ற மோனிஷ் மீது தாக்கியுள்ளார்கள். நிலைகுலைந்து மயங்கி விழுந்த தந்தை மகனை அப்பகுதி மக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வாணியம்பாடி நகர போலிசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர்.