ரவுடிகளை அடக்கு:-போலிசை கண்டித்து ஆர்பாட்டம்!
கே.ஏ.ஜெகதீஷ்வரி,
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்படி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் ரவுடிகளின் தொல்லை அதிகரித்திருப்பதாகவும், அதை போலிசார் கண்டு கொள்ளவில்லை என்பதுமே ஆர்பாட்டக்காரர்களின் முறையீடு.
அதே போல் கஞ்சா விற்பனைக்கு போலிசாரே துணை போவதாக சொல்லும் அப்பகுதி மக்கள் காவல் துறையினரை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தூக்கிபிடித்தப்படி கண்டனக் குரல்களை எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு போலிசாருக்கு இது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.