ஷர்மிளா டீச்சர் சிக்கினார்! மாணவனுடன் எஸ்கேப் ஆன மேட்டர்!

ஷர்மிளா டீச்சர் சிக்கினார்! மாணவனுடன் எஸ்கேப் ஆன மேட்டர்!

  பெ.விஜய்,

  பள்ளி மாணவனை ஏமாற்றி  அவனை இழுத்துக் கொண்டு ஓடிய டீச்சரை  போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

   திருச்சி மாவட்டம், துறையூர் அருகே 17 வயதுள்ள 11-ம் வகுப்பு மாணவனை ஏமாற்றி திருமணம் செய்த 26 வயது டீச்சரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

  தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் கடந்த 5-ம் தேதி பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக மாணவரின் பெற்றோர்கள் துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அதே பள்ளியில் டீச்சராக பணியாற்றி வரும் ஷர்மிளாவுடன் அந்த மாணவர் கிளம்பியிருப்பது தெரியவந்தது.

    அப்படியிருக்க டீச்சரின் செல்போனை வைத்து ஆய்வு செய்ததில் இருவரும் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி என பல இடங்களில் டவர் சுற்றியது.

   இறுதியில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இருவரும் தங்கி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

தோழி வீட்டில் தங்கி இருந்த டீச்சர் ஷர்மிளா மற்றும் மாணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தஞ்சாவூர் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

 இதையடுத்து டீச்சர் ஷர்மிளாவை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த முசிறி அனைத்து மகளிர் காவல்துறையினர் மாணவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

  காலம் கெட்டு போச்சுல்ல.