அமைச்சர் தொகுதியில் பணிபுரிகிறோம் என்ற உணர்வுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும்! ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக அளித்த ஆயிரம் கோடியில் முறைகேடு:-துரைமுருகன் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
துரைமுருகன் தொகுதியில் தான் பணிபுரிகிறோம் என்ற உணர்வுடன் அதிகாரிகள் செயல்பட வேண்டும், கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டிக்காக ஆயிரம் கோடி வந்தது அதில் நிறைய முறைகேடு நடந்துள்ளது இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழகம் முழுவதும் ஆறுகள் ஏரிகள் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவின் படி
பாகுபாடில்லாமல் முழுமையாக அகற்றப்படும் - கனிம வளத்துறையில் எவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்தும் என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளோம் என வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் புள்ளி விவகரங்களோடு அறிவிப்பேன் - தென்னை பென்னை பாலாறு இணைப்பு திட்டத்திற்கு தற்போது நிதியில்லை - அமைச்சர் துரைமுருகன் பேட்டி,
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் நகர்புற வாழ்வாதார வேலைவாய்ப்பு திட்டத்தை நீர் வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் சுஜாதா,ஆணையர் அசோக்குமார்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
இவ்விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் அரசு சார்பில் ஒதுக்கப்படும் நிதிகள் முறையாக செலவிடப்பட வேண்டும், கடந்த ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் ஸ்மார் சிட்டிக்காக வந்தது. அதனை எங்கே செலவிட்டார்கள்? என்ன செய்தார்கள் என தெரியவில்லை.
இந்த முறைகேடு குறித்து நான் விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுப்பேன். அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் தொகுதியில் தான் பணிபுரிகிறோம் என்ற உணர்வுடன் பணியாற்ற வேண்டும். சமுதாய கூடங்கள் தனி நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது இந்த ஆக்கிரமிப்பை மாநகராட்சி ஆணையர் ஒரு வாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்று பேசினார்.
பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
கொணவட்டத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம், உச்சநீதிமன்றம் கடுமையாக நடவடிக்கை எடுக்க சொல்லியதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை செயலாளரை அழைத்து இதுகுறித்து பேசுகிறார். தமிழகம் முழுவதும் நீர் நிலை ஆக்கிரமிப்பு கணக்கெடுக்கப்பட்டுள்ளது பட்ச்சாதாபம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கபடும்.
இல்லையென்றால் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துவிடுவார்கள் அதற்காக அவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்காமல் மாற்று இடம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆறுகள் ஆக்கிரமிப்பை அகற்றவும் அளவீடு செய்து வருகிறோம், குடியாத்தத்தில் அரசால் வீடு வழங்கப்பட்டவர்கள் கூட நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளனர்.
அகரம் ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும்.
கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் மத்திய அரசின் திட்டம், கர்நாடக எதிர்ப்பு தெரிவித்தால் மத்திய அரசு தான் கர்நாடக அரசுடன் பேச வேண்டும்.
ஆறுகளை இணைப்பதை முதல் முதலாக செய்தவன் கரிகால சோழன் தாமிர பரணி கருமேணி ஆற்றுடன் இணைக்கும் திட்டம் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் ,பாலாறு செய்யாறு இணைப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தென் பென்னை பாலாறு இணைக்க விவசாயிகள் கோருகின்றனர், ஆனால் நிதியில்லை கனிம வளக்கொள்ளை திருடிச் செல்கின்றனர் அதனை கண்டுபிடித்து வண்டிகளை பறிமுதல் செய்துள்ளோம் அது குறித்த புள்ளிவிவரங்களை சட்டமன்றத்தில் கூறுவேன் என்று சொன்னார்.