வேலூர் ஆட்சியரால் கௌரவிக்கப்பட்ட தியாகிகள்!

வேலூர் ஆட்சியரால் கௌரவிக்கப்பட்ட தியாகிகள்!

ஜி.கே.சேகரன்,

 குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.9.  68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

  வேலூர்மாவட்டம், வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் காவலர்கள், சாரணர் இயக்கம் தேசிய மாணவர் படை ஆகியோர்களின் அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுகொண்டனர்.

  அப்போது தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு சான்றுகள் பதக்கங்கள் வழங்கப்படது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.9.  68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் குமாரவேல் பாண்டிய பயனாளிகளுக்கு வழங்கினார்.

  வேலூர் மாவட்ட ஊராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது

  வேலூர்மாவட்டம்,வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு தேசிய கொடிக்கு மரியாதை செய்து வணக்கம் செலுத்தினார்கள்,

   இதே போல வேலூர் மாநகராட்சியில் குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில் தேசிய கொடியை மேயர் சுஜாதா ஏற்றினார். இவ்விழாவில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டு  தேசிய கொடிக்கு வணக்கம் செய்து மரியாதை செலுத்தினார்கள்.