உழவர் சந்தையில் தடுப்பூசி முகாமை துவக்கிய ஆட்சியர்!

கு.அசோக்,
1965 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது மக்கள் அனைவரும் இதில் பங்கேற்று கொரோனா தடுப்பூசியை செலுத்திகொள்ள வேண்டும் என்று உழவர் சந்தையில் தடுப்பூசி முகாமை துவங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேட்டி
வேலூர் மாவட்டம்,வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள வேலூர் உழவர் சந்தையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் துவங்கி வைத்து ஆய்வு செய்தார்.
உடன் சுகாதாரத்துறை இணை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர் இதில் வியாபாரிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திகொண்டனர்.
வேலூர் மாவட்ட மக்கள் 12.50 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்படவுள்ளது.
அனைத்து இடங்களிலும் இந்த முகாம்கள் நடக்கிறது, இதில் 1965 முகாம்களை வேலூர் மாவட்டத்தில் அமைத்துள்ளோம் நடமாடும் முகாம்கள் 450 முகாம்கள் உள்ளது.
இந்த பணியில் 4 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அனைத்துத்துறைகளையும் இணைத்து அனைத்து அரசு அலுவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மக்களும் கொரோனா தடுப்பூசியை செலுத்திகொள்ள வேண்டுமென கூறினார்.