நுண்ணறிவு போலிஸ் மீது நடவடிக்கை கோரி பெண் தர்ணா!

க.முகில்,
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி இவர் காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.
அயனாவரத்தைச் சேர்ந்த காவலர் வீரமணி, இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார்.
இவரும் சரஸ்வதியும் 2017ம் ஆண்டு காவலர் பயிற்சி போது காதலித்து உள்ளனர்.
அதன்பிறகு வீரமணியிடம் திருமணம் செய்துகொள்ள சரஸ்வதி கேட்டுள்ளார் 2019 ஆம் ஆண்டு அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பல போராட்டங்களுக்கு பிறகு மீடியாக்களை சந்தித்து சரஸ்வதி முறையிட்டதால் வேறுவழியின்றி 2021ஆம் ஆண்டு சரஸ்வதி வீரமணி திருமணம் நடைபெற்றது.
அப்படியிருக்க திருமணம் நடந்து இரண்டு மாதம் கூட ஆகாத நிலையில் சரஸ்வதியை வீரமணி மற்றும் அவரது குடும்பத்தார் வரதட்சனை கேட்டு சித்திரவதை செய்துவீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
எனவே சரஸ்வதி, ஓட்டேரி துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
பின்னர் சென்னை பெருநகர ஆணையாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனுவை வழங்க வந்தார்.
அப்போது அங்கு சரஸ்வதி தர்ணாவில் ஈடுபட்டார்.
செய்வதறியாத போலீசார் உடனடியாக அவரிடம் சமரசம் பேசி மாவட்ட ஆட்சியரிடம் சரஸ்வதியை கூட்டி சென்று நடந்த விபரத்தை தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஓட்டேரி துணை ஆணையர் அலுவலகத்துக்கு இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.