பாலின சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகள்:-ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,

 வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் சாத்துமதுரை ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 தேசிய பஞ்சாயத்துராஜ் தினமான இன்று (24.04.2022) சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் சாத்துமதுரை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைப்பெற்றது.

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேசிய ஊராட்சிகள் தின வாழ்த்து மடல் அனைத்து ஊராட்சிமன்ற தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 இந்த கிராம சபா கூட்டத்தில் அடுத்த இரண்டு  ஆண்டுகளில் அடைய வேண்டிய நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிப்பதும் மற்றும் இந்த பொருள் குறித்து உறுதிமொழி எடுப்பதும் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பு கிராம சபா கூட்டத்தை சிறப்பித்தனர்.

  சாத்துமதுரை ஊராட்சியில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், நியாய விலை கடைகள், நூலக கட்டிடம், மகளிர் சுயஉதவி குழு கட்டிடம், கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு, கை பம்புகள், பொது குழாய்கள், தெருவிளக்குகள், ஏரிகள், குளங்கள், சிறுமின்விசை பம்புகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றினை ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார்.

 மேலும், வறுமை இல்லாத ஊராட்சியாக மாற்ற வேண்டும் எனவும், அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தவும் அனைத்து வீடுகளிலும் பயன்படுத்த கூடிய நிலையில் வீட்டு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு தரமான குடிநீர் வழங்கும் நிலையை ஏற்படுத்தவும், அனைவருக்கும் குடியிருக்க பாதுகாப்பான வீடு, தேவையான அடிப்படை தேவைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தவும்,

 பாலின சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வலிமைப்படுத்தி பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தவும், நிலைத்த வளர்ச்சியை அடைவதில் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகம் பங்கு உள்ளது. அவர்களின் முழு உத்வேகத்துடன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்துமாறும், இந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

  இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள்  உறுதிமொழி எடுத்து கொண்டனர்.  மேலும் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நட்டு வைத்தார்.

   இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, கணியம்பாடி ஒன்றியகுழு பெருந்தலைவர் திருமதி.திவ்யா கமல் பிரசாத், சாத்துமதுரை ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.ஜோதிலட்சுமி மற்றும் துறைசார்ந்த உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர். 

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.