எப்படியும் கண்டுபிடிச்சுடுவாங்களாம்!

எப்படியும் கண்டுபிடிச்சுடுவாங்களாம்!

க.பாலகுரு,

 அமைச்சர் நேருவி தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் தீர்வு காணப்படும் என திருவாரூரில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி.

 திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஜெயக்குமார் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்..

 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட முழுவதும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்கு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் முக்கிய குற்றங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்க சிறப்பு அலைபேசி எண்ணான 9363495720 அழைக்கலாம்.

 திருச்சியில் நடைபெற்ற ராமஜெயம் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தொடர்ந்து வழக்கில் பணியாற்றி வருவதாகவும், விரைவில் தீர்வு காணப்படும் என சொன்னார்.