வாக்கு சாவடி மறுசீரமைப்பு! குறையிருந்தால் ஏழு நாட்களுக்குள் சொல்லிவிடுங்கள்!

ம.டெல்லிராஜன்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்து வாக்குச்சாவடிகளின் பட்டியலினை வெளியிடுமாறு தெரிவித்திருந்தது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத்தொகுதிகளில் உள்ள 1038 வாக்குச்சாவடிகளை தலைமைத்தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச்செயலர் அவர்களின் அறிவுரையின்படி அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் தணிக்கை செய்து வருகின்றனர்.
சட்டமன்றத்தொகுதி வாரியாக தற்போதுள்ள வரைவு வாக்குச்சாவடிகளின் விவரங்கள்,
வ.எண்
சட்டமன்றத்தொகுதிகளின் எண் மற்றும் பெயர்
வரைவு வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை
- 047.வாணியம்பாடி 259
- 048.ஆம்பூர் 245
- 049.ஜோலார்பேட்டை 267
- 050.திருப்பத்தூர் 267
மொத்தம் 1038
மேற்படி வரப்பெறும் முன்மொழிவுகளின் அடிப்படையில் புதிதாக வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் எனவும், தற்போது உள்ள 1038 வாக்குச்சாவடிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரால் 24.08.2023 அன்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களிடம் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1500 மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் ஏதும் இல்லை, மேலும் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் அலுவலகங்களிலும் விளம்பரபடுத்தப்படும் என மாவட்ட ஆட்சியரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எவருக்கேனும், மேற்படி பொருள் குறித்து ஏதேனும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின் தங்களது எழுத்துபூர்வமான கோரிக்கை / ஆட்சேபனை மனுக்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர்களுக்கு வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் அளிக்கமாறு மாவட்ட ஆட்சித்தலைவா திரு.தெ.பாஸ்கரபாண்டியன்.இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.