இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

  கு.அசோக்,

  தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  இராணிப்பேட்டை மாவட்டம்,

இராணிப்பேட்டை அடுத்த முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்து இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தினை நடத்தினர்.

இந்த ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டதாவது,

 துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை  வெளியிட வேண்டும்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதிய ம் மற்றும் தனி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டுமஉங்கள் ஊரில் உங்களைத் தேடி மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசு திட்டப் பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து திட்டப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அதே போல்  திருப்பத்தூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது

 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் ஓய்வு அறை முன்பு திருப்பத்துர் மாவட்ட தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

  இதில் மேற்கண்ட கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.