அரசு நிலத்தை மீட்கவும் ஓடையில் பாலம் கட்டி தரவும் கோரிக்கை!

கு.அசோக்,
ஓடை கால்வாய் கடப்பதற்கு பாலம் அமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
இராணிப்பேட்டை மாவட்டம், ரெண்டாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமூன்னூர் கிராம பகுதியில் சுவர் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொன்னை பாலாற்றில் இருந்து ஏரிமூணூர் கிராமத்தின் வழியாக 30 அடி கொண்ட ஓடை கால்வாயானது அமைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் விவசாய மற்றும் பள்ளி கல்லூரி உட்பட பல்வேறு வேலைகளுக்கு ஓடை கால்வாயை நீரில் இறங்கி ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் ஓடையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்து இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் இறுதிச் சடங்கு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகள் சென்று வருவதற்கும் பாதையின்றி மிகவும் ஆபத்தான முறையில் ஓடையை கடந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நில பரப்பளவு இருப்பதாகவும் அதனை அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாகவும் அதனை மீட்டு கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவங்கள் குறித்து கிராம மக்களின் சார்பில் பலமுறை புகார்கள் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கிராம மக்கள் தங்களது கோரிக்கை மனைவினை வழங்கினர்.
மேற்படி கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.