கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கினார்

கு.அசோக்,
படைவீரர் நாளை முன்னிட்டு கொடி நாள் வசூலை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் துவங்கி வைத்தார். தனது பங்கினை கொடி வசூலுக்கு வழங்கி கொடி நாள் ஊர்வலத்தையும் ஆட்சியர் துவங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், வேலூர் நகர அரங்கம் அருகிலிருந்து ஊர்வலம் சென்றது
இதில் சாரணர் இயக்கத்தினர்,தேசிய மாணவர் படை முன்னாள் படைவீரர்கள் ஊர்காவல் படையினர் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று கடை கடையாக படைவீரர் நாள் வசூல் செய்தனர்.
இந்த தொகையானது முன்னாள் படைவீரர்கள் போரில் உயிரிழந்தவர்கள் கைகால்களை இழந்தவர்களுக்கு இந்த நிதியை பயன்படுத்தவுள்ளனர் என்பது நினைவுகூற தக்கதாகும்.