ரூ.197 கோடியில் வேலூர் பெண்ட்லேண்ட் மருத்துவமனை!

ரூ.197 கோடியில் வேலூர் பெண்ட்லேண்ட் மருத்துவமனை!

ஜி.கே.சேகரன்,

வேலூர் அரசினர் பெண்ட்லேண்ட் மருத்துவமனை ரூ.197 கோடி மதிப்பில் அடிக்கல்லை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்  பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையின் ரூ.7 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தா£.¢

 வேலூர்மாவட்டம், வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனை கடந்த 1882 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் காலத்திலிருந்து செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 1915 ஆம் கூடுதல் கட்டிடங்களை கட்டி பெரிய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.

  இடையே அந்த மருத்துவமனை யின் செயல்பாடுகள் குறைக்கப்பட்ட்டன. அடுக்கம்பாறையில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டதால் இந்த மருத்துவமனை அதன் மூச்சை நிற் உத்திக்கொண்டது.  ஆகவே மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

 இந்நிலையில் வேலூரின் மையப்பகுதியில் இருந்த பெண்ட்லேண்ட் மருத்துவமனையை நவீன வகையில் செயல்பட வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. குறிப்பாக மக்கள் கோரினர்.

 கனிவோடு பரிசீலித்த அரசாங்கம் அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. அந்த வகையில் ரூ.197 கோடி மதிப்பில் தமிழக முதல்வர் மு,க.ஸ்டாலின் காணொளி காட்சியில் மூலம் சென்னை தலைமை செயலகத்திலிருந்து அடிக்கல் நாட்டினார்.

இதன் மூலம் மருத்துவமனை அதி நவீன மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவுள்ளது இதன் பின்னர் வேலூரில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

  இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன் நந்தகுமார் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பானுமதி  உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனா.¢   இதே போன்று பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனை ரூ.7 கோடி மதிப்பில் தமிழக முதல்வர் கட்டிடங்களை திறந்து வைத்ததை அடுத்து அதனை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.