வைகை ஆற்றில் மணல் மற்றும் தண்ணீரை அபேஸ் செய்யும் ஒப்பந்தக்காரர்!

வைகை ஆற்றில் மணல் மற்றும் தண்ணீரை அபேஸ் செய்யும் ஒப்பந்தக்காரர்!

டி.இ.முகமது,

  ரூ.19.65/-கோடி மதிப்பிலான திட்டத்தை ஒப்பந்தம் எடுத்த காண்டிராக்டர் வைகை ஆற்றில் மணல் மற்றும் தண்ணீரை சட்ட விரோதமாக எடுத்து பயன்பட்யுத்திக் கொள்கிறார். ஆகவே காண்டிராக்டர் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோருகிறார்கள்.

 இது பற்றின விவரம் வருமாறு,

  மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ஆற்றின் குறுக்கே 19.65/-கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றது.

 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் இருந்து வைகை ஆற்றுக்கு வடக்கு பக்கமுள்ள இரும் பாடி, கருப்பட்டி, கரட்டுப் பட்டி நாச்சி குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல சுமார். 5 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டியிருக்கிறது.

 இதனால் இப்பகுதிகளை இணைக்க வைகை ஆற்று குறுக்கே மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையெடுத்து இரும்பாடி .மன்னாடிமங்கலம் வைகை ஆற்றில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 19.கோடியே 65.லெட்சம் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது .

நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான பிரிவு அதிகாரிகள் மேற்பார்வையில் முதல் கட்டப் பணியாக தூண் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

  இந்த பணிக்கு வைகை ஆற்றில் இருந்து மணல் மற்றும் தண்ணீரை டுத்து பாலம் கட்டும் பணிக்கு பயன்படுத்து கூடாது என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மணல் பயன்படுத்துவதற்கு மாற்றாக எம் சாண்ட் கொண்டுதான் மேம்பாலம் கட்ட வேண்டும். லாரி மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து பாலம் கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.

  இந்த விதிகளை காற்றில் பறக்க விட்ட பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டுமான அதிகாரிகள் துணையோடு பாலம் கட்ட ஒப்பந்தம் எடுத்துள்ள எஸ். ஏ. எல். & நிறுவனம் நியமித்த ஒப்பந்ததாரர் விதிகள் மீறி வைகை ஆற்றின் உள்ளே பல கோடி ரூபாய் மதிப்புள்ள அதாவது ஆயிரக்கணக்கான யூனிட் மணல் இரவில் டிப்பர் லாரி மூலம்  எடுத்துச் சென்று பாலம் கட்டுமான பணிக்கு பயன்படுத்துகிறார்.

 ஆற்று அருகே அமைக்க பட்டுள்ள கலவை ஆலைக்கு கொண்டு சென்று இந்த மணல் உடன் சிமெண்ட் ஜல்லி இவற்றை கலவை செய்து பாலம் கட்டும் பணி நடைபெறுவதாகவும் மேலும் விதிகளை மீறி சட்ட விரோதமாக வைகை ஆற்றின் உள்ளே கிணறு அமைத்து தினமும் தற்காலிக கிணற்றிலிருந்து பாலம் கட்டும் பணிகளுக்கு மோட்டர் பம்புகள் மூலம் பல லட்சம் லிட்டர் தண்ணீரை திருட்டுத்தனமாக எடுத்து பயன் படுத்தி வருகின்றனார்.

 ஒப்பந்த விதிகளை காற்றி பறக்க விட்டு பாலம் கட்டும் பணிக்கு சட்டவிரோதமாக மணல் மற்றும் தண்ணீர் எடுப்பதால் ஒப்பந்ததாரருக்கு பல கோடி ரூபாய் இதர லாபம் கிடைக்க வழிவகை செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 

 இது குறித்து ஆட்சியரிடம் புகார் அளித்தும் ஹூம்..மெந்த பதிலும் இல்லையாம்.