ஜப்தி நடவடிக்கைலியிருந்து தப்பிய ஆட்சியர் அலுவலக வாகனங்கள்!

ஜப்தி நடவடிக்கைலியிருந்து தப்பிய ஆட்சியர் அலுவலக வாகனங்கள்!

 ஜி.கே.சேகரன்,

 நீதிமன்றம் தெரிவித்த தொகையை 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அளிப்பதாக அதிகாரிகள் உறுதி கொடுத்தனர். அத பேரில் ஆட்சியர் அலுவலக வானங்கள் ஜப்தி நடவடிக்கையிலிருந்து தப்பின.

வேலூர் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களின்  கார்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு ஆட்சியரின் காரில் ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு.

 வேலூர்மாவட்டம், திருவலம் அருகே உள்ள இலைய நல்லூர் பகுதியில் மத்திய மின் தொகுப்பு மையம் ( பவர் கிரிட் ) அமைக்க 2012 ஆம் ஆண்டு விவசாய நிலங்கள்  கையகப்படுத்தும் பணிகள் துவங்கியது அப்பகுதி விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என போராட்டங்களில் ஈடுபட்டனர்

  இருப்பினும் 2013 ஆம் ஆண்டு 50 ஏக்கர்  நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய மின் தொகுப்பு மையம் அமைக்கப்பட்டது.

   தற்போது ஒரு சென்ட் நிலத்திற்கு 1750 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பணம் போதாது என   வேலூர் நீதிமன்றத்தில் 19  விவசாயிகள் வழக்கு தொடுத்தனா. ¢2019 ஆண்டு ஒரு சென்ட் நிலத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் என கணக்கிட்டு மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவே ஒரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  ஆனால் பணம் வழங்கப்படாததால், எனவே விவசாயிகள் மேல்முறையீடு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த 3 மாதங்களுக்கு  முன்பு வட்டியுடன்3 கோடியே 3 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

   இல்லையென்றால் வேலூர் மாவட்ட ஆட்சியரின் இரண்டு கார்கள் வருவாய் கோட்டாட்சியர் இரண்டு கார்கள் ஜப்தி செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற ஊழியர் மற்றும் வழக்கறிஞருடன் கார்களை ஐப்தி செய்ய  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனா. ¢மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஒரு காரில் வந்து இறங்கிவிட்டு கார் வேகமாக சென்று விட்டது.  மற்றொரு காரில் மாவட்ட ஆட்சியர் என்கின்ற பெயர் மறைக்கப்பட்டு இருந்த நிலையில் இருந்தது அந்த காரில் ஜப்தி நோட்டீஸ்  ஒட்டப்பட்டது.

 இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்

 ¢சுமார் ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் 15 நாட்களுக்குள் பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியவுடன் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸ் எடுக்கப்பட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.