ரூ.4.50 கோடியில் கல்வி கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம், வேலூர் தனபாக்கிய கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் வேலூர் மாவட்டம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது. இதில் ரூ.4. 50 கோடிக்கு மேலாக மாணவர்களுக்கு கல்வி கடனை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் இந்த விழாவில் திரளான மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேசுகையில், இம் மாவட்டத்தில் இதுவரையில் 3 கல்வி கடன் வழங்கும் முகாம்கள் 10 வங்கிகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. இன்று ஒரே நாளில் 89 பேருக்கு கல்வி கடன் சுமார் ரூ.4. 50 கோடிக்கு மேல் வழங்கியுள்ளோம்.
மாணவர்கள் இக்கல்வி கடனை பெற்று உயர் கல்வியை பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் இதே போல் மேலும் மாணவர்கள் கல்வி கடனை பெற விண்ணப்பித்தால் அவர்களுக்கும் கல்வி கடனை வழங்க தயாராக இருக்கிறோம் இதனை நீங்கள் பயன்படுத்திகொள்ள வேண்டுமென பேசினார்.