பயிரை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும்! அதிகாரிகளிடம் விவசாயிகள்  கோரிக்கை!

பயிரை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும்! அதிகாரிகளிடம் விவசாயிகள்  கோரிக்கை!

கு.அசோக்,

 பயிர்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை வேட்டையாட அனுமதி வழங்க வேண்டும் - வனத்துறையினர் விவசாயிகள் மீது போடும் பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்,  ஏரி குளங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

 வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டமானது நடைபெற்றது. இதில் மின்சாரம், வேளாண் துறை, கால்நடைத்துறை வனத்துறை உள்ளிட்ட பலதுறை சார்ந்த அதிகாரிகளும் வேலூர் காட்பாடி,அனைக்கட்டு கேவிகுப்பம் குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்றனர்.

 இந்த கூட்டத்தில், மின் வேலி அமைத்ததால்  தான் வன விலங்குகள் செத்தது என்றும், இதற்¢கு விவசாயி தான் காரணம் என ஒவ்வொரு முறையும் பொய் கூறி வனத்துறை பொய் வழக்கு போடுகிறார்கள். அது போன்ற பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

 அப்படி திரும்ப பெறவில்லை என்றால் நாங்கள் வழக்கை நீதிமன்றத்தில் அதை சந்திக்கவும் தயாராக உள்ளோம். இனி வரும் காலங்களில் அதுபோல் பொய் வழக்கால் விவசாயிகள் யாரும் பாதிக்க கூடாது என கோரிக்கை வைத்து பேசினர்.

 மேலும் காட்டுபன்றிகள் பயிர்களை சேதப்படுத்தினால் அவற்றை வேட்டையாட அனுமதிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி குளம் ஆறு ஆகிய நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைகாலங்களில் நீர் செல்லும் கால்வாய்கள் வழியாக விளைநில பயிர்களுக்கு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.