சூப்பரா பணி புரிந்தீங்க:-எஸ்.பி.சான்று!

சூப்பரா பணி புரிந்தீங்க:-எஸ்.பி.சான்று!

 ம.பா.கெஜராஜ்,

 இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில்கிரைம் மீட்டிங்  நடந்தது. இதில் கடந்த ஜூலை மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர்கள் உதயசூரியன் காவேரிப்பாக்கம் காவல் நிலையம், சங்கர், ஆற்காடு நகர காவல் நிலையம், கெஜலட்சுமி, இராணிப்பேட்டை காவல் நிலையம், புருஷோத்தமன் சோளிங்கர் காவல் நிலையம், முதல் நிலை காவலர்கள் கபிலன், சிப்காட் காவல் நிலையம், சம்பாசிவம், வாலாஜா காவல் நிலையம், வெங்கடேசன், கொண்ட பாளையம் காவல் நிலையம், பாலாஜி, இராணிப்பேட்டை காவல் நிலையம், இரண்டாம் நிலை காவலர்கள் சதீஷ்குமார், அரக்கோணம் நகர காவல் நிலையம், ,ஜெயபாரதி, காவேரிப்பாக்கம் காவல் நிலையம் ஆகியோரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபா சத்தியன் இ.கா.ப அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசும்  வழங்கினார்கள்.

 மேலும் இக்குற்ற ஆய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் முத்து கருப்பன்  (இணைய வழி குற்றப்பிரிவு )  ஆகியோருடன் இராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு, காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.