பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

பூண்டி கலைவாணன் தலைமையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

 க.பாலகுரு,

திருவாரூரில் அ முக, அமமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வக்ராநல்லூர் ஊராட்சியில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.

  இதில் வக்கரா நல்லூர் ஊராட்சியை சேர்ந்த புதுத் தெரு, தெற்குத் தெரு, மேலகண்ணுச்சாங்குடி, அக்கரை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் அதிமுக, அமமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மாற்று கட்சியினர் தங்களது கட்சிகளில் இருந்து விலகி 75-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

 முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இல்லாத ஊராட்சி மன்றங்களுக்கு புதிதாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்படும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப வக்ராநல்லூர் ஊராட்சிக்கு  23 லட்சம் மதிப்பில் புதிதாக வக்ராநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

  இதனை திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் செங்கல்லை எடுத்து வைத்து அடிக்கல் ந மேலும், வக்ராநல்லூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நூலக கட்டிடத்தினை பூண்டி கலைவாணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

  நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ஆய்வு மேற்கொண்டு புத்தகத்தை எடுத்து படித்து பார்த்து அதிலிருந்து குறிப்பை எடுத்துக் கூறி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

 தொடர்ந்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பில்  மறுசுழற்சி செய்வதற்காக கட்டப்பட்ட குப்பை வண்டி நிழலகத்தினை திறந்து வைத்தார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் அக்கரைதெரு பகுதியில்  12 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருகாகரண் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நீர்மங்கலம் பகுதியில் 1000லிட்டர் கொள்ளளவு கொண்ட 3லட்சம் மதிப்பிலான புதிய மினி டேங்க் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

  இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐ.வி. குமரேசன், மாவட்ட பிரதிநிதி செல்வம், வக்ராநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் இல்முன்னிஷா பேகம், வக்ராநல்லூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் முகம்மது மகதூம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.