அமைச்சர் காந்தியின் வரவேற்பில் உற்சாகமான முதல்வர் ஸ்டாலின்!

ஜி.கே.சேகரன்
இராணிப்பேட்டை மாவட்டம் வழியாக வேலூர் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வாலாஜா சுங்கச்சாவடியில் உற்சாக வரவேற்பு கலைநிகழ்ச்சிகளை முதல்வர் கண்டு ரசித்தார்
இராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா சுங்கச்சாவடி வழியாக சென்னையிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் நடக்கவுள்ள இலங்கை தமிழர்கள் குடியிருப்புகள் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்தார்.
அவருக்கு வாலாஜா சுங்கசாவடியை கடந்தார், அவருடன் காரில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் வந்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி தலைமையில், வேலூர் சரக காவல்துறை துணைதலைவர் ஏ.ஜி.பாபு, இ.கா.ப., இராணிப்பேட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், இ.கா.ப. உள்ளிட்டோர் முதல்வரை வரவேற்றனர்.
பின்னர் தொண்டர்கள் அளித்த பல்வேறு புத்தகங்களை முதல்வர் பெற்றுகொண்டார்.
பல்வேறு தமிழ் பாடல் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது அதனை முதல்வர் கண்டு ரசித்தார்.