வருமானத்தை விட 654 சதம் கூடுதல் சொத்து! முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு! சோதனை நடக்கிறது!

வருமானத்தை விட 654 சதம் கூடுதல் சொத்து! முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு! சோதனை நடக்கிறது!

 கு.அசோக்,

 அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி க்கு சொந்தமான வீடு திருப்பத்தூரில் உள்ள அவரது ஓட்டல் உள்ளிட்ட 28 இடங்களிலும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.ரமேஷ் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை.

  அறப்போர் இயக்கத்தின் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

  வருமானத்தை விட 654 சதம் கூடுதல் சொத்து சேர்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

   அதன் அடிப்படையில் வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும், அவரது இரண்டாவது மனைவியின் தாய்வீடான திருவண்ணாமலை மாவட்டம் குருவிமலையில் உள்ள பண்ணை வீட்டிலும், வேலூரில் உள்ள அ.தி.மு.க.பிரமுகர் சத்துவாச்சாரி கர்ணல், அவரது மாப்பிள்ளை வசிக்கும் சேண்பாக்கம் பகுதிகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளார்கள். அதுபற்றின விவரம் வருமாறு

 திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கே.சி.வீரமணி.

இவர் அதிமுக ஆட்சிக் காலத்தில் வணிகவரி மற்றும் பத்திரபதிவு அமைச்சராக இருந்தவர்.

 அதிமுக மேற்கு மாவட்டகழக செயலாளராக கே.சி.வீரமணி பதவி வகித்து வருகிறார்.

 இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வீரமணியின் வீடு, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் பகுதிகளில் உள்ள ஹில்ஸ் ஓட்டல் உட்பட 28 இடங்களிலும், அதே போல்  திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் என்பவர் தொடர்புடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

  வீரமணி மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளையும், அவர்களது வங்கி டெபாசிட்டுகள் குறித்தும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகிறார்கள்.

  அதேபோல்,வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தமாரிகுப்பம் பகுதியில் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரி உள்ளது.

 அங்கு இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 இதை அறிந்த வீரமணியின் ஆதரவாளர்கள் கூடி அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்படுவதாக கோஷங்களை எழுப்பினார்கள்.