இ.பி.எஸ். ஆதரவு முன்னாள்கள் எஸ்கேப்! ஓ.பி.ஸை பார்த்து ஓட்டம் பிடித்தவர்களை தொண்டர்கள் வசைபாடினர்!

ம.பா.கெஜராஜ்,
அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சூழலில் இன்று காலை தீர்மானங்களை தீர்மானிக்கிற குழு நடைபெற்றது.ஸ்
சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக்கழகத்தில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, ஆர்.பி.உதயகுமார் சிவிசண்முகம், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், மற்றும் வைகை செல்வன், வளர்மதி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இதில் ஓ.பி.எஸ். மற்றும் இபிஎஸ் பங்கேற்கவில்லை.
அப்படியிருக்க இ.பி.எஸ்.சொந்த ஊருக்கு போய் சேர்ந்தார். அங்கு அவரது வலது இடதுகள் ஒன்றுக்கூடி கழகப்பொதுச்செயலாளரே வருக என்று அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இது ஒரு புறம் இருக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு திடீரென்று வந்தார்.
அவரது வருகையை அறிந்த முன்னாள் அமைச்சர்கள் சிவிசண்முகம், ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
கட்சிக்கு ஒற்றை தலைமை என்கிற தீயை ஜெயக்குமார் கொளுத்தி போட்ட பின்னர், சென்னையில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் 3 நாட்களாக ஓபிஎஸ் ஆலேசனை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் முடிந்த நிலையில், ஓபிஎஸ் தலைமை அலுவலகம் வந்தார். ஆலோசனைக்கு முன்பாக தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டதிலிருந்து எஸ்கேப் ஆன ஜெயக்குமாரை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் அதிமுக தொண்டர்கள் திட்டி தீர்த்தனர்.
அவரது காரை மறித்து பின்னர் விரட்டினர்.
இந்நிலையில் கட்சிக்கு ஒற்றை தலைமை என்கிற அவசியம் இல்லவே இல்லை. கட்சி நகமும் சதையுமாக ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பொன்னையன் செய்தியாளர்களிடம் சொன்னார்.