நீட் விலக்கும்! காமலை கண் விமர்சனமும்! சபாநாயகர் வருத்தம்!

நீட் விலக்கும்! காமலை கண் விமர்சனமும்! சபாநாயகர் வருத்தம்!

 ஆர்.ராஜேஷ் குமார்,

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல், அதனை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். இதையடுத்து அது குறித்து ஆலோசனை மேற்கொள்ள சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

  அந்தக் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பிய அனுப்பிய கடிதத்தை பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

   நீட் விலக்கு அறிக்கை காமாலை கண் கொண்டவர்களால் தயாரிக்கப்பட்டது போலிருக்கிறது என ஆளுநர் ஆர்.என் ரவி, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் குழுவை விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.

 சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்த நீட் தேர்வு விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

 1968ல் தமிழ்நாடு என பெயர் சூட்டியபோது பேரறிஞர் அண்ணா, சட்டப்பேரவையில் 'தமிழ்நாடு வாழ்க' என 3 முறை முழக்கமிட்டதைப் போல, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'தமிழ்நாடு வாழ்க' என 3 முறை கூறி உரையை நிறைவு செய்தார்.

   இதில் சிறப்பு விஷயமாக பாரக்கப்படுவது தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதன்முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதா 1 வாரத்திற்குள் மீண்டும் நிறைவேற்றி அனுப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

   அந்த ட்விட்டர் பதிவில், இன்று வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள்! நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் உடனடியாக இதனைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.