மகன் சாவில் மர்மம்! மருமகளை கைது செய்யக் கோரி மாமனார் தரப்பினர் சாலை மறியல்!!

கு.அசோக்,
மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மருமகளை கைது செய்யக்கோரி மாமனார் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ரகுபதியூர் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் சாந்தி தம்பதியினரின் மகன் நவீன்குமார், அதே பகுதியில் அழகுநிலையம் வைத்து வந்துள்ளார்.
இவருக்கும் குரும்பேரி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் மகள் விசித்ராவுக்கும் கடந்த 8 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு மோனிஷ்(4) என்கிற மகனும், தன்ஷிகா( 2) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மனைவி விசித்ராவின் அத்தை மகன் குமாரம்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன்( 24) என்பவருடன் நண்பர்களாக பழகி வந்துள்ளார்.
இந்த நிலையில் விசித்ரா மற்றும் சீனிவாசன் இருவருக்குமிடையே கள்ள காதல் மலர்ந்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து கடந்த 4-ஆம் தேதி விசித்ரா மற்றும் சீனிவாசன் இருவரும் சேர்ந்து நவீன்குமார் வாயில் நுரையுடன் மயக்க நிலையில் இருக்கிறார் என கூறி நவீன் குமாரின் தந்தை முருகனிடம் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற பொழுது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே நவீன் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனா.
¢ இதன் பேரில் இரண்டு நாட்களுக்கு முன்பு நவீன் குமரை அடக்கம் செய்தனர்.
இதனால் முருகன் தனது மருமகள் மீது உள்ள சந்தேகத்தின் பேரில் தொலைபேசி ஆராய்ந்தபோது அதிக நேரம் சீனிவாசனுடன் விசித்ரா பேசியுள்ளது தெரிந்தது.
அதனைத் தொடர்ந்து மருமகளான விசித்ரா தான் தனது மகன் கொலைக்கு காரணம் எனக்கூறி திருப்பத்தூர் கிராம காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால் இதுவரை போலீசார் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
தனது மருமகளான விசித்திராவூம் அவருடைய அத்தை மகனான சீனிவாசனும் ஒன்றிணைந்துதான் மதுவில் விஷம் வைத்து தனது மகனை கொலை செய்திருக்க வேண்டும் எனக் கூறியும் புதைத்த நவீன் குமாரின் உடலை திரும்பவும் தோண்டி எடுத்து மறு கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அதை இன்ஸ்பெக்டர் திருமால் காதில் போட்டுக் கொள்ளாததால் ¢ 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் திருப்பத்தூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்தார்.
திருப்பத்தூர் வட்டாட்சியர் மற்றும் திருப்பத்தூர் மருத்துவ அலுவலரிடம் கூறி மறு உடற்கூறாய்வு செய்யப்படும் என்று கூறியதால் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.