உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமான சூழல்..சொல்கிறார் ஓ.பி.எஸ்.!

ஜி.கே.சேகரன்!
தமிழகத்தில் 10 மாதகால திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சி சொன்ன வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை - தமிழகத்தை இன்றைக்கு கல் நெஞ்சக்காரர்கள் ஆட்சி செய்கிறார்கள் அடுத்து என்ன நடக்கும் என்பதே மக்களுக்கே தெரியாது - திமுகவினர் தெருவில் ஓட்டுகூட கேட்க முடியாது - உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமான சூழல் உள்ளது, வேலூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைதலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ,பன்னீர் செல்வம் பேச்சு
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் அண்ணாதிராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் ஆதரித்து கூட்டம் நடைபெற்றது.
அதிமுக வேலூர் மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழக முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சிதுணைதலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.,பன்னீர் செல்வம் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் குறிப்பிடுகையில், இன்றைக்கு திமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, மக்கள் திமுக மீது கடுமையான கோபத்தில் உள்ளனர்.
இந்த நிலைமை அரசியல் மாறியுள்ளது இன்றைக்கு திமுக்வினர் தெருவில் சென்று ஓட்டு கூட கேட்க முடியாது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
அதிமுக தொண்டர்கள் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும் அதிமுக அரசு பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தது ஆனால் 10 ஆண்டுகளாக நல்லாட்சி நடந்தது ஆனால் திமுக அரசு 10 மாதகாலத்தில் மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது.
அவர்கள் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தார்கள் ஆனால் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் மகளிர்களுக்கு மாதம் தோறும் ரூ,,1000,நீட்டை ரத்து செய்வோம் என்று சொன்னா£.
¢ இன்றைக்கு என்ன நடக்கிறது நீட்டிற்கு அஸ்திவாரம் போட்டதே திமுக தான் ஆனால் அதிமுக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீடு வழங்கினார்கள்.
இதனால் தமிழகத்தில் 531 மருத்துவ கல்லூரியில் படிக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆளுநர் நீட் தேர்வு தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்டது உரிய விளக்கம் அளிக்க வேண்டிய கடமை திமுக அரசுக்கு உள்ளது.
இவர்கள் சட்டபோராட்டம் நடத்தி நீட்டில் வெற்றி காண வேண்டும் ஆனால் இதனை செய்ய தவறிய திமுக நல்ல அரசு அரசு ஊழியர் அகவிலைப்படி அளிப்போம் பழைய ஓய்வூதியம் ரத்து செய்வோம் இப்படி எல்லா வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.
திமுக அரசு பொங்கல் பரிசுகளில் தரமற்ற பொருட்க்ளை வழங்கியுள்ளனர் அவர்கள் வழங்கிய வெல்லம் உருகுகிறது அரிசியை மாடு கூட சாப்பிடவில்லை. ஸ்டாலின் தான் வராறு விடியல் தரபோராறு என்று பொய்யை கூறி ஆட்சியில் அமர்ந்தார்.
அதிமுகவினர் மக்களிடம் வாக்குகளை சேகரியுங்கள் நூறு சதவிகித்ம் வெற்றியை பெறுவோம் என்று பேசினார்.