பி டீம்...."பத்மவிபூஷன், மாயாவதி, ஓவைசிக்கு பாரத ரத்னா": உ.பி.தேர்தல் பரிசு!

பி டீம்...."பத்மவிபூஷன், மாயாவதி, ஓவைசிக்கு பாரத ரத்னா": உ.பி.தேர்தல் பரிசு!

ம.பா.கெஜராஜ்,

போட்டியிட் 100 தொகுதிகளில் 22.3 லட்சம் வாக்குகள்,அதாவது தொகுதிக்கு சராசரி 20,000 வாக்குகளை  பிரித்து

பிஜேபி யின்  வெற்றிக்கு 100 இடங்களில் வழி வகுத்த அசாசுதீன் ஒவைசி என்கிற பேச்சு நாடெங்கிலும் பேசப்பட்டு வருகிறது. இவர் ஏ.ஐ.எம்.ஐ.எம்  கட்சியின் நிறுவனத்தலைவரும், தற்போதைய எம்.பியும் ஆவார்.

அவரையும், இதே போல் உ.பி.யின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான செல்வி மாயவதியையும் பா.ஜ.க.வின் பி டீம் என்று மக்கள் விமர்சிக்கத் துவங்கியுள்ளனர்.

 நேரடியாக சொல்ல வேண்டுமெனில் பி.எஸ்.பி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் பிஜேபிக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதற்காக தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் பா.ஜ.க.வின் "பி" அணிகள் என்று எதிர்க்கட்சியில் உள்ள பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் சாதனை வெற்றிக்குப் பிறகு, சிவசேனா தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோரை கடுமையாகத் தாக்கினார்.

  பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு அவர்களின் பங்களிப்புக்காக பத்ம விபூஷன் அல்லது பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்கிறார் அவர்.

   அகிலேஷ் யாதவ் முன்பைவிட 3 மடங்கு அதிகம் இடங்களை பெற்றுள்ளார்., 42ல் இருந்து 125 ஆக  சீட்டுகள் உயர்ந்துள்ளது. பாஜகவின் வெற்றிக்கு மாயாவதியும், ஒவைசியும் பங்களித்துள்ளனர், எனவே அவர்களுக்கு பத்ம விபூஷன், பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும்" என்று திரு. ராவத் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

   இந்த இரண்டு கட்சிகளின் பங்களிப்பு இல்லையெனில் அகிலேஷ்யாதவ் அமோக வெற்றி கண்டிருப்பார்.

   நான்கு மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றாலும், உத்தரகாண்டில் அதன் முதல்வர் தோல்வியடைந்தார், கோவாவில் இரண்டு துணை முதல்வர்கள் தோல்வியைச் சந்தித்தனர், மேலும் பஞ்சாபில் கட்சி "முற்றிலும் நிராகரிக்கப்பட்டது" என்று திரு ராவத் சொல்கிறார்.

"பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், எல்லோரும் பஞ்சாபில் பிரமாண்டமாக பிரச்சாரம் செய்தார்கள், பிறகு ஏன் பஞ்சாபில் தோற்றீர்கள்?

  இதுபோன்ற குற்றச்சாட்டுகளை இரு தரப்பினரும்  பலமுறை மறுத்துள்ளனர்.