ஒரே நாளில் தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் செய்துவிட முடியாது! அமைச்சர் உதயநிதி பேட்டி!

க.பாலகுரு,
தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் என்பதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. ஆனாலும் முதல் 10 தொகுதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என திருவாரூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார் இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 319 பயனாளிகளுக்கு 4கோடியே 80இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது ..
திருவாரூர் மாவட்டத்தில் அரசு அறிவித்த நலத்திட்டங்கள் எந்த நிலையில், எத்தனை சதவீதம் முடிவடைந்திருக்கிறது என்பது குறித்த ஆய்வுகூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. அதிகாரிகள் இதற்கு விளக்கமளித்தனர்.
மீண்டும் அடுத்த மாதம் ஆய்வுகூடத்துக்கு வருவேன் என அவர்களிடம் தெரிவித்துள்ளேன்.
மக்கள் பணி தொடரும். உடற்கல்வி பாடம் கட்டாயமாக்குவது குறித்து அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கபடும். உடற்கல்விக்கு 77 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பற்றாக்குறை சரிசெய்யப்படும். தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் என்பதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. ஆனாலும் முதல் 10 தொகுதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார். திருவாரூர் தொகுதியின் தேவைகுறித்து எம்எல்ஏ க்கள் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் காய்ச்சல் அதிகமாக பரவிக்கொண்டுள்ளது குறித்து பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை அமைச்சர்களிடம் தான் கேட்க வேண்டும் என உதயநிதி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ,சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன்,உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன செயல் இயக்குநர் பி.பிரியங்கா, தாட்கோ தலைவர் மதிவாணன் ,தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து,
மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் அனைத்துதுறை உயர் அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.