குட்டி கடையில் 500 கோடி வர்த்தகமா? அம்மாடியோவ் ஊழலில் வேலுமணி!

குட்டி கடையில் 500 கோடி வர்த்தகமா? அம்மாடியோவ் ஊழலில் வேலுமணி!

  ஜி.சாந்தகுமார்,

பெட்டிக்கடை சைசுக்கு சின்னதாக ஒரு எலெக்ட்ரிக் கடை, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அந்தக்கடையில் ரூ. 500 கோடிக்கு வர்த்தகம் செய்திருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அங்கு முழு அளவில் சோதனை நடத்திவருகிறார்கள். இதற்கான உபயம் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆவார்.

  இது பற்றின விவரம் வருமாறு,

 இன்று காலை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். .

 மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார். இது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 5 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய நகரங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 மேலும் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதி உள்ளது என விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

 இதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில்அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்ப்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

 ஒரே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் தொடர்புடைய 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், சென்னை புரசை வாக்கதில் உள்ள முருகன் எலெக்டிக் என்கிற பெட்டிகடையில் ரூ.500 கோடி அளவுக்கு பொருட்கள் வாங்கியமாதிரி கணக்கில் வருவதாக அறிந்து அங்கு சோர்தனை நடத்தப்பட்டது.

  மேலும், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கூடியிருந்த எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் போலீசார் இடையே பிரச்சனை ஏற்பட்டது. எனவே ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.