நான் அமைச்சர் அல்ல வாட்ச்மேன்!அன்பில் மகேஷ் பொய்யாமொழி நகைச்சுவைப் பேச்சு!

கு.அசோக்,
அரசுப் பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல அது பெருமையின் அடையாளம மாற்றுவேன் அன்பின் மகேஷ் பொய்யாமொழி நான் அமைச்சர் அல்ல வாட்ச்மேன் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு தனக்கு இருப்பதால் பள்ளி எப்போது திறப்பது பள்ளி எப்போது பூட்டுவது என்பதைத் தான் முடிவு செய்ய வேண்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நகைச்சுவைப் பேச்சு!
இராணிப்பேட்டைமாவட்டம், அரக்கோணத்தை அடுத்த பதிவில், சி.எஸ்.ஐ. சென்னை பேராயம், தூய பேதுரு ஆலயத்தின் வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சிஎஸ்ஐ சென்னை பேராயத்தின் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமை வகித்தார்.
சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டஇந்நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
இதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்கள் தன்னை கல்வி அமைச்சர் என்று சொல்லும்பொழுது நான் அமைச்சர் அல்ல பள்ளி வாட்ச்மேன் என்றும் மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்த உடன் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை தனக்கு இருப்பதாகவும் நகைச்சுவையோடு சொன்னார்.
மேலும், பள்ளி எப்போது திறப்பது? எப்போது மூடுவது என்பதை தான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பேசினார்.
அப்போது அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், மேலும் அரசுப்பள்ளிகள் வறுமையின் பள்ளி அல்ல அது பெருமையின் பள்ளியாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிஎஸ்ஐ சென்னை பேராயத்தின் செயலர் டைட்டஸ் பொருள் ஏசுதாஸ் பெண்கள் தலைவி யமுனா ஜார்ஜ் மற்றும் நலத்திட்ட உதவிகளை இயக்குனர் பால் தயானந்தர், ஆயர்கள் சிஎஸ்ஐ பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு திருச்சபை மக்கள் இதில் கலந்து கொண்டனர் மேலும் பல்வேறு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.